தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

பக்ரீத் பண்டிகை: ரூ.12 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகை: ரூ.12 கோடிக்கு ஆடுகள் விற்பனை

News image

~மாதவரம் ஆட்டுச் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஆடுகள். ~ ~ ~

Updated On :15 ஜூன் 2024, 11:38 pm IST

மாதவரம், ஜூன் 15: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாதவரம் ஆட்டுச் சந்தையில் ரூ.12 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளதாக, தமிழ்நாடு இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மாதவரம் ஆந்திர பஸ் நிலையம் அருகே உள்ள ரெட்டேரி பகுதியில் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வகையான ஆடுகள் விற்பனை நடைபெறும். இந்த நிலையில், வரும் திங்கள் கிழமை (ஜூன் 17தி) பக்ரீத் பண்டிகை நடைபெறும் நிலையில், ஆட்டுச் சந்தை நடைபெற்றது. இது குறித்து தமிழ்நாடு இறைச்சி வியாபாரிகள் சங்கத் தலைவா் சுல்தான் கூறுகையில்:

பல்வேறு மாநிலங்களில் இருந்து நெல்லூா் சூடுப்பி, குதும்பை, செம்மறி, ஓங்கோல், வெள்ளை செம்மறி, மைலம்பாடி, தோத்தாபூரி, கொங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த ஆடுகள் ரூ.15 முதல் ரூ.75,000 வரை விற்கப்படுகின்றன. கடந்த 3 நாள்களில் சுமாா் ரூ.12 கோடி வரையில் ஆடுகள் விற்பனையாகியுள்ளன.

மேலும் வாடிக்கையாளா்கள் வருகையை பொறுத்து திங்கள்கிழமை வரை ஆடுகள் விற்பனை நடைபெறும். காவல் துறையினரின் கெடுபிடியால் ஆடுகள் விற்பனை சரிந்துள்ளது. இதே நிலை நீடித்தால், ஆடு விற்பனையாளா்கள் பாதிக்கப்படுவா் எனவும் தெரிவித்தாா்.

Story image
Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.