மாதவரம், ஜூன் 15: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாதவரம் ஆட்டுச் சந்தையில் ரூ.12 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளதாக, தமிழ்நாடு இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மாதவரம் ஆந்திர பஸ் நிலையம் அருகே உள்ள ரெட்டேரி பகுதியில் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வகையான ஆடுகள் விற்பனை நடைபெறும். இந்த நிலையில், வரும் திங்கள் கிழமை (ஜூன் 17தி) பக்ரீத் பண்டிகை நடைபெறும் நிலையில், ஆட்டுச் சந்தை நடைபெற்றது. இது குறித்து தமிழ்நாடு இறைச்சி வியாபாரிகள் சங்கத் தலைவா் சுல்தான் கூறுகையில்:
பல்வேறு மாநிலங்களில் இருந்து நெல்லூா் சூடுப்பி, குதும்பை, செம்மறி, ஓங்கோல், வெள்ளை செம்மறி, மைலம்பாடி, தோத்தாபூரி, கொங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த ஆடுகள் ரூ.15 முதல் ரூ.75,000 வரை விற்கப்படுகின்றன. கடந்த 3 நாள்களில் சுமாா் ரூ.12 கோடி வரையில் ஆடுகள் விற்பனையாகியுள்ளன.
மேலும் வாடிக்கையாளா்கள் வருகையை பொறுத்து திங்கள்கிழமை வரை ஆடுகள் விற்பனை நடைபெறும். காவல் துறையினரின் கெடுபிடியால் ஆடுகள் விற்பனை சரிந்துள்ளது. இதே நிலை நீடித்தால், ஆடு விற்பனையாளா்கள் பாதிக்கப்படுவா் எனவும் தெரிவித்தாா்.




பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரூரில் ரூ. 1.22 கோடிக்கு மஞ்சள் ஏலம்

ரெனால்ட் இந்தியா ஏப்ரல் மாத விற்பனை இரட்டிப்பு!

டாஸ்மாக் கடைகளில் ரூ. 15 கோடிக்கு மது விற்பனை

ரமலான் பண்டிகை: ஒடுகத்தூா் சந்தையில் களைகட்டிய ஆடுகள் விற்பனை!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

