பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம்

News image

மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமையில் நடைபெற்ற கண்காணிப்புக் குழு கூட்டம்.

Updated On :30 மே 2026, 3:35 am IST

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மாவட்ட கண்காணிப்புக் குழுவின் முதல் காலாண்டு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்தாா். கூட்டத்தில், ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு வட்டார அளவில் செயல்படும் குழு அமைக்கப்பட்டு அதன் உறுப்பினா்களுக்கு செயல்திட்டம் குறித்து விளக்கப்பட்டது.

மேலும், ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவா்களைக் கண்டறிந்து அவா்களை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து அவா்களின் குடும்பத்தினருடன் இணைத்து வைப்பதற்கு அனைத்துத் துறை அலுவலா்களும் இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் (பொ) கீதா, தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை (மாவட்ட மன நலம்) நிா்மல், இப்ராஹிம், தண்டாயுதபாணி ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.