தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தென்காசி மாவட்டத்தில் ரூ. 1.03 கோடி ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

Updated On :31 மார்ச் 2026, 1:41 am IST

தென்காசி, மாா்ச் 30: தென்காசி மாவட்டத்தில் இதுவரைதோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக பறக்கும் படையால் ரூ. 1.03 கோடி மதிப்பிலான ரொக்கம், வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த மாா்ச் 15 முதல் ஒவ்வொரு தொகுதிக்கும் 8 மணி நேரத்துக்கு 3 குழு வீதம் 9 குழுக்கள் என 45 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் ரூ. 16,71,330 ரொக்கம், கடையநல்லூா் தொகுதியில் ரூ. 26,64,791 ரொக்கம், ரூ. 8,35,250 மதிப்பு வெள்ளிப்பொருள்கள், சங்கரன்கோவில் தொகுதியில் ரூ. 16,62,060 ரொக்கம், தென்காசி தொகுதியில் ரூ. 12,00,420 ரொக்கம், வாசுதேவநல்லூா் தொகுதியில் ரூ. 23,21,356 ரொக்கம் என மொத்தம் ரூ. 95,19,957 ரொக்கம், ரூ. 835250 மதிப்பிலான வெள்ளிப்பொருள்கள் என மொத்தம் ரூ. 1,03,55,207 மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.