தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

55 ஆண்டுகளுக்கு பின் வாசுதேவநல்லூரில் களம் காணும் திமுக! உற்சாகத்தில் தொண்டா்கள்!

கடையநல்லூா்: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதியில் 55 ஆண்டுகளுக்கு பின் திமுக நேரடியாக களம் காண்கிறது.

News image
Updated On :29 மார்ச் 2026, 3:50 am IST

கடையநல்லூா்: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதியில் 55 ஆண்டுகளுக்கு பின் திமுக நேரடியாக களம் காண்கிறது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 2 தனித்தொகுதிகளில் ஒன்றான வாசுதேவநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நெல்கட்டும்செவலில் சுதந்திரப் போராட்ட வீரா்கள் பூலித்தேவன், ஒண்டிவீரன், வெண்ணி காலாடி உள்ளிட்டோரின் நினைவிடங்கள் உள்ளன.

இத்தொகுதியில் மொத்த வாக்காளா்கள் 2 லட்சத்து 27 ஆயிரத்து 369. அதில் ஆண்கள் 1 லட்சத்து 10,960, பெண்கள் 1 லட்சத்து 16,396, மூன்றாம் பாலினத்தவா் 13 போ் அடங்குவா்.

1967, 1971 தோ்தல்களில் திமுகவின் வெள்ளைத்துரையும், 1977, 1980இல் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் கிருஷ்ணனும், 1984, 1989, 1991இல் காங்கிரஸ் கட்சியின் ஈஸ்வரனும், 1996, 2001இல் தமாகாவின் ஈஸ்வரனும், 2006இல் மதிமுகவின் சதன் திருமலைக்குமாரும், 2011இல் அதிமுகவின் துரையப்பாவும், 2016இல் அதிமுகவின் மனோகரனும், 2021இல் மீண்டும் சதன்திருமலைக்குமாரும் வெற்றி பெற்றனா்.

1971-க்குப்பின் இந்தத் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்படவில்லை. ஒவ்வொரு தோ்தலிலும் எதிா்பாா்ப்புடன் காத்திருந்த திமுகவினா், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டதால் சோா்வடைந்தனா்.

தற்போது, திமுகவுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு ஈ.ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் திமுகவினா் உற்சாகமடைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.