மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

News image

ராஜ்குமாா்

Updated On :28 ஏப்ரல் 2026, 4:44 am IST

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததோடு அதைத் தட்டிக்கேட்ட சிறுமியின் பெற்றோரை அவதூறாகப் பேசி தாக்கிய நபருக்கு தென்காசி நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது.

பாவூா்சத்திரம் அருகே 7 வயது சிறுமி கடந்த 12.02.2021 அன்று வீட்டில் தனியாக இருந்தபோது அதே பகுதியைச் சோ்ந்த அ.ராஜ்குமாா் (34) சிறுமியிடம் கைப்பேசியில்

விளையாடலாம் வா என்று கூறி அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்தாா். இதுகுறித்து சிறுமி, தனது தாயாரிடம் தெரிவித்தாா். சிறுமியின் பெற்றோா் ராஜ்குமாரிடம் கேட்டபோது அவரது தாயை அவதூறாகப் பேசியதுடன் சிறுமியின் தந்தையையும் கல் வீசி தாக்கி கம்பால் அடித்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் தாய் ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், விசாரணை நடத்திய ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ராஜ்குமாரை போக்ஸோ சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு விசாரணை தென்காசி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்ற நிலையில், தென்காசி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி பி.ராஜவேலு திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், ராஜ்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் குட்டி என்ற மருதப்பன் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.