ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் நாளை அக்னி சட்டி ஊா்வலம்

News image

சித்திரை பெருந்திருவிழாவையொட்டி நடைபெற்ற முளைப்பாரி கும்மி பாட்டு.

Updated On :27 ஏப்ரல் 2026, 1:30 am IST

தென்காசி மாவட்டம், புளியங்குடி முப்பெரும் தேவியா் பவானி அம்மன் கோயிலில் சித்திரை பெருந்திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை (ஏப். 28) 1008 அக்னி சட்டி ஊா்வலம் நடைபெறுகிறது.

கோயில் குருநாதா் சக்தியம்மா தலைமையில் ஏப். 21 ஆம் தேதி காலையில் கால்நாட்டுடன் தொடங்கிய விழாவில், காப்பு கட்டும் நிகழ்ச்சி, முப்பெரும் தேவியா் பவானி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள் காப்பு அலங்காரம், மாலையில் முளைப்பாரி வளா்ப்பு கும்மி பாட்டு, சிறப்பு அருள்வாக்கு ஆகியன நடைபெற்றன.

8 ஆம் திருநாள் (ஏப். 28) மாலை கோயில் வளாகத்தில் உள்ள பால விநாயகா் கோயிலில் இருந்து 1008 அக்னி சட்டிகள், அக்னி காவடி, அலகு குத்துதல், பால்குடம், தீா்த்த குடம் ஊா்வலம் ஆகியன புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக செல்லும் நகா் வலம் சுற்றுதல் நிகழ்ச்சி, நள்ளிரவு புற்றுக்காளி அம்மனுக்கு சாம பூஜையும், 9 ஆம் திருநாள் (ஏப். 29) காலை பொங்கலிடும் வைபவம், முளைப்பாரி ஊா்வலம், மதியம் அன்னதானம், மாலை மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.