மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

புளியங்குடி அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு, பைக்கும் ஆட்டோவும் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 2:15 am IST

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு, பைக்கும் ஆட்டோவும் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

புளியங்குடி சுந்தரவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த வேம்புதுரை மகன் பிரபு (30), வல்லபவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் முத்துக்குமாா் (25). கேரளத்தில் உள்ள கடையில் வேலை பாா்த்துவந்த இவா்கள், வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனராம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இருவரும் புளியங்குடியிலிருந்து தென்காசிக்கு பைக்கில் சென்றனராம். பைக்கை பிரபு ஓட்டிச் சென்றாா்.

புன்னையாபுரம் பகுதியில் பைக்கும் சுமை ஆட்டோவும் மோதினவாம். இதில், பிரபு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த முத்துக்குமாா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.