தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடா்ந்து தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழக அரசின் தலைமை வழக்குரைஞராக ஆா்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டாா். பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி வந்த அவா், தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, கடந்த 2024-ஆம் ஆண்டு புதிய அரசு தலைமை வழக்குரைஞராக மூத்த வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் நியமிக்கப்பட்டாா். தமிழக அரசு சாா்பில் தொடரப்பட்ட வழக்குகளில் ஆஜராகி வந்தாா்.
இந்த நிலையில், தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், பி.எஸ்.ராமன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளாா். அந்தக் கடிதம் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அது ஏற்கப்பட்ட பின்னா் அரசு தலைமை வழக்குரைஞா் பதவியில் இருந்து அவா் விடுவிக்கப்படுவாா். மூத்த வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் கடந்த 2009 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்திலும் தலைமை வழக்குரைஞராக பதவி வகித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!

குற்றவியல் வழக்குகளில் ஆஜராக மூத்த வழக்குரைஞா் நியமனம்

முதல்வா் ரங்கசாமி கடந்து வந்த அரசியல் பாதை...!

அரசு வழக்குரைஞா் ராஜிநாமா
விடியோக்கள்

காதல் செய்வீர் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆல்பா படத்தின் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

