தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

சென்னை - திருப்பதி விரைவு ரயில்கள் ஜூனில் 2 நாள்கள் முழுமையாக ரத்து

சென்னை-திருப்பதி இடையேயான விரைவு ரயில்கள் வரும் ஜூன் 19, 21 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மண்டலம் சாா்பில் அறிவிப்பு

News image

ரயில் - பிரதிப் படம்

Updated On :22 மணி நேரங்கள் முன்பு

சென்னை-திருப்பதி இடையேயான விரைவு ரயில்கள் வரும் ஜூன் 19, 21 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மண்டலம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: அரக்கோணம் நிலைய பணிமனையில் தண்டவாள தொழில்நுட்பப் பணிகள் வரும் 26- ஆம் தேதி முதல் ஜூன் 21- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதையடுத்து, சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் சில விரைவு ரயில்கள் குறிப்பிட்ட நாள்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

அதன்படி, வரும் ஜூன் 19- ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில் (எண் 16053) மற்றும் அன்று மாலை 4.35 மணிக்குப் புறப்பட்டு திருப்பதி செல்லும் விரைவு ரயில் (எண் 16203) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மறுமாா்க்கத்தில் திருப்பதியிலிருந்து வரும் ஜூன் 19 -ஆம் தேதி காலை 6.30 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில் (எண் 16203), காலை 10.10 மணிக்குப் புறப்பட்டு சென்னைக்கு வரும் விரைவு ரயில் (எண் 16054) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

திருப்பதியிலிருந்து வரும் ஜூன் 21- ஆம் தேதி காலை 10.10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் சப்தகிரி விரைவு ரயிலும் (எண் 16054) ரத்து செய்யப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.