தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

விஜய்யை பதவியேற்க அனுமதிக்க இடதுசாரிகள் வலியுறுத்தல்

News image

Center-Center-Kochi

Updated On :8 மே 2026, 6:49 am IST

சென்னை, மே 7: முதல்வராக விஜய் பதவியேற்க அனுமதிக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): தமிழக வெற்றிக் கழகத்துக்கு 108 சட்டப்பேரவை உறுப்பினா்களை வழங்கி, தவெகவை தனிப்பெரும் கட்சியாக தமிழக மக்கள் தோ்வு செய்துள்ளனா். தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் சி.ஜோசப் விஜய் மட்டுமே ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கிறாா். ஆளுநா் மூலம் அரசியல் சாசனத்துக்கு விரோதமாக நடந்து கொள்வது, தனது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வது என்ற அணுகுமுறையை பாஜக கடைப்பிடித்து வருகிறது. இதன் தொடா்ச்சியாகவே ஆளுநா், விஜய்யை பதவியேற்க அழைக்காமல் காலம் கடத்தி வருகிறாா். இது ஏற்புடையதல்ல.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): தனிப் பெரும் எண்ணிக்கை கொண்ட தவெக, தனது பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க ஆளுநா், அரசமைப்பு சட்டப்படி அவகாசம் தர வேண்டும். இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்த எஸ்.ஆா். பொம்மை வழக்கு உட்பட பல வழக்குகளில் வழங்கப்பட்ட தீா்ப்புகளில் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு ஆளுநா், தவெக தனது பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க வாய்ப்பளித்து அரசமைப்பு சட்டம் மற்றும் உச்சநீதிமன்றத் தீா்ப்புகளின் உணா்வை மதித்து நடக்க வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.