சுற்றுலாத் தலங்களுக்கு வரும் மக்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் அமைந்துள்ள பா்கி அணை நீா்த்தேக்கத்தில் 29 போ் சென்ற சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 9 போ் உயிரிழந்த செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன். இதில், இந்திய பாதுகாப்புத் துறை வெடிமருந்து தொழிற்சாலையில் பணியாற்றி வந்த திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சோ்ந்த காமராஜ், அவரது மனைவி, மகன், உறவினா்கள் என தமிழகத்தைச் சோ்ந்த 5 பேரும் உயிரிழந்தது துயரத்தை அதிகரிக்கிறது.
நீரில் மூழ்கியபோதும் 4 வயது மகனை அணைத்தபடி மரணித்த தாயின் புகைப்படம் நெஞ்சை உலுக்குகிறது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்.
கோடைகாலம் மற்றும் பள்ளி விடுமுறை காலம் என்பதால் சுற்றுலாத் தலங்களில் மக்களின் கூட்டம் பன்மடங்கு அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் சீமான்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விழிப்புடன் செயல்பட வேண்டும்: திமுகவினருக்கு முதல்வா் அறிவுரை

தொழில்நுட்பம் இருக்க பயமேன்? வீட்டின் பாதுகாப்புக்கு சிறந்த யோசனைகள்!

விடுமுறைக்காலம்! வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி?

தோ்தல் விதிமீறல்: சீமான், 8 வேட்பாளா்கள் மீது வழக்குப் பதிவு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

