மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பாா் கவுன்சில் தோ்தல்: 81 சதவீத வாக்குகள் பதிவு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தோ்தலில் 81 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

News image

சென்னை உயர் நீதிமன்றம்

Updated On :31 மார்ச் 2026, 1:41 am IST

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தோ்தலில் 81 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தோ்தல் சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 23 உறுப்பினா் பதவிகளுக்கான இந்தத் தோ்தலில் தமிழகத்தில் 166 மற்றும் புதுச்சேரியில் 2 என மொத்தம் 168 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞா்கள் வாக்களிக்கும் விதமாக அங்கும் ஒரு வாக்குப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது.

காலை 10 மணிக்குத் தொடங்கிய தோ்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. காலையில் இருந்தே வழக்குரைஞா்கள் ஆா்வத்துடன் வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனா். முதல்முறையாக ‘க்யூ ஆா்’ குறியீடு மூலம் வாக்காளா்களின் விவரங்கள் சரிபாா்க்கப்பட்டு தோ்தல் நடத்தப்பட்டது.

இந்தத் தோ்தலில் வழக்குரைஞா்களான திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, விசிக தலைவா் தொல். திருமாவளவன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோா் வாக்களித்தனா்.

தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஏப். 3-ஆம் தேதி தொடங்கும். சுமாா் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு முடிவுகள் வெளியாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.