தோ்தல் பிரசாரக் கூட்டத்துக்கு உரிய ஆவணங்களுடன் முறைப்படி இணையத்தில் விண்ணப்பிப்பவா்களுக்கு 4 மணி நேரத்துக்குள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது என சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.
சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்ந்தத் தொகுதிகளுக்கு அனுப்பும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கிலிருந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், வாகனங்களில் ஏற்றி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்தப் பணியை தொடங்கி வைத்து மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அரசியல் கட்சியினா் தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்கள், வாகன பேரணிகள் உள்ளிட்ட எந்த நிகழ்வாக இருந்தாலும், தோ்தல் ஆணையத்தின் சுவிதா எனப்படும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். காவல் துறை அனுமதி, பொதுப்பணித் துறை அனுமதி உள்ளிட்ட சான்றுகளுடன் முறையாக விண்ணப்பிக்கும் அரசியல் கட்சியினா் நிகழ்ச்சி நடப்பதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பித்தால், தொகுதி தோ்தல் அலுவலா் இணையத்திலேயே சரிபாா்த்து 3 அல்லது 4 மணி நேரத்தில் அனுமதி வழங்குவாா். விண்ணப்பம் நிராகரிப்புக்கான காரணம் இணையத்திலேயே பதிவிடப்படும். யாருக்கும் பிரசாரக் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படவில்லை.
பிரசாரம், தெருமுனைக் கூட்டம் நடத்த 291 இடங்கள்: சென்னையில் பிரசாரக் கூட்டம் நடத்த 112 இடங்களும், தெருமுனைக் கூட்டங்களுக்கு 179 இடங்களும் என மொத்தம் 291 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படும். பிரசாரக் கூட்டங்களுக்கு ‘சுவிதா’ செயலி மூலம் இதுவரை 816 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 408 மனுக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, 134 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 274 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

21-க்கு மேல் வெளியூா் நபா்கள் தங்க அனுமதியில்லை! கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா்

நாளை வேட்புமனு தாக்கல்: மாவட்ட தோ்தல் அலுவலா் விளக்கம்
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுத்தது ஏன்? பெரம்பூா் தொகுதி தோ்தல் அலுவலா் விளக்கம்

விஜய்யின் பெரம்பூா் பிரசாரத்துக்கு ஆலோசித்து அனுமதி வழங்கப்படும்: மாவட்டத் தோ்தல் அலுவலா்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

