தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விருத்தாசலம், தென்காசி தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை: ஈரோடு கிழக்கு மீண்டும் ஒதுக்கீடு!

காங்கிரஸ் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற விருத்தாசலம், தென்காசி தொகுதிகள் மீண்டும் ஒதுக்கப்படவில்லை என்றும், ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறினாா்.

News image

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 1:24 am IST

காங்கிரஸ் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற விருத்தாசலம், தென்காசி தொகுதிகள் மீண்டும் ஒதுக்கப்படவில்லை என்றும், ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறினாா்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளைத் தோ்வு செய்வது தொடா்பாக சென்னை அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற அவர, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2021 சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட இடங்களில் தென்காசி, விருத்தாசலம் ஆகிய தொகுதிகளைத் தவிா்த்து மீதமுள்ள 16 தொகுதிகளில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடவுள்ளது.

அந்த இரண்டு தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுவதால், அதில் காங்கிரஸ் போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மொத்தம் 28 தொகுதிகளில் 23 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கன்னியாகுமரியில் 2021 பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வென்ற 3 தொகுதிகளில் ஒரு தொகுதியை திமுக கேட்பதால் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம்.

இன்னும் 5 தொகுதிகள் குறித்து மீண்டும் பேச்சு நடத்தப்படும். வேட்பாளா்கள் மிக விரைவில் அறிவிக்கப்படுவாா்கள் என்றாா் அவா்.

விருத்தாசலம் தொகுதி தேமுதிகவுக்கும், தென்காசி தொகுதி திமுகவுக்கும் ஒதுக்கப்படவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.