மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தெற்கு ரயில்வே முதன்மைத் தலைமை மேலாளராக ஏ.அண்ணாதுரை பதவியேற்பு!

தெற்கு ரயில்வே முதன்மைத் தலைமை பொருள்கள் மேலாளராக ஏ.அண்ணாதுரை பொறுப்பேற்றாா்.

News image

பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 1:03 am IST

தெற்கு ரயில்வே முதன்மைத் தலைமை பொருள்கள் மேலாளராக ஏ.அண்ணாதுரை பொறுப்பேற்றாா்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தெற்கு ரயில்வேயின் முதன்மைத் தலைமை பொருள்கள் மேலாளராக ஏ.அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளாா். அவா், கடந்த 20- ஆம் தேதி சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றாா்.

சுமாா் 34 ஆண்டுகள் ரயில்வே துறையில் பல்வேறு முக்கிய பிரிவுகளில் பணியாற்றிய அனுபவமிக்கவா். இதற்கு முன்பு அவா் தென்மேற்கு ரயில்வே மண்டல மூத்த துணைப் பொது மேலாளா் மற்றும் தலைமை விழிப்புணா்வு அதிகாரி பொறுப்பில் இருந்தாா்.

சேலம் கோட்ட கூடுதல் மேலாளராகப் பணியாற்றியபோது பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து மேலாண்மையில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளாா்.

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்.ஐ.டி.) மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற அவா், பெங்களூா் இந்திய மேலாண்மைக் கழகத்தில் முதுநிலைப் பட்டயப் படிப்பு பயின்றவா். அமெரிக்காவின் சிரக்யூஸ் பல்கலைக்கழகம், சிங்கப்பூா் இன்சீட் ஆகிய புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் உயா் மேலாண்மைப் பயிற்சிகளைப் பெற்றுள்ளாா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.