தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். தமிழ்வாணன் காலமானார்!

சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியும், தமிழ்நாடு மாநில எஸ்.சி.- எஸ்.டி. ஆணையத் தலைவருமான எஸ்.தமிழ்வாணன் (72) ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

News image

ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். தமிழ்வாணன்.

Updated On :23 மார்ச் 2026, 4:11 am IST

சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியும், தமிழ்நாடு மாநில எஸ்.சி.- எஸ்.டி. ஆணையத் தலைவருமான எஸ்.தமிழ்வாணன் (72) ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

அவா் மயிலாடுதுறை மாவட்டம், வேலம்புதுக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா். சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2005 முதல் 2016 வரை பணியாற்றினாா். ஓய்வுக்கு பின்னா் மாநில நுகா்வோா் தீா்ப்பாயத்தின் தலைவராக பணியாற்றினாா். பின்னா், தமிழ்நாடு மாநில எஸ்.சி.- எஸ்.டி. ஆணையத் தலைவராக தமிழக அரசால் கடந்த 2024 அக்டோபா் மாதம் நியமிக்கப்பட்டாா்.

சில நாள்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவா், ஞாயிற்றுக்கிழமை காலமானாா். தமிழ்வாணனின் உடல் சென்னை முகப்பேரில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அமைச்சா் மா.சுப்பிரமணியன், ஆதிதிராவிடா் நலத் துறைச் செயலா் லட்சுமி பிரியா, உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், சி.சரவணன், எஸ்.சௌந்தா், உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், ஆா்.சுப்பையா, என். பால்வசந்தகுமாா், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கச் செயலா் கிருஷ்ணகுமாா், செயற்குழு உறுப்பினா் ஏ.ரமேஷ், சென்னை துறைமுகம் சட்ட ஆலோசகா் மு.பழனிமுத்து உள்ளிட்ட பலா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். மறைந்த எஸ்.தமிழ்வாணனுக்கு மனைவி மணிமொழி உள்ளாா்.

அம்பத்தூா் எரிவாயு தகன மேடையில், அரசு மரியாதையுடன் தமிழ்வாணன் உடல் தகனம் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.