தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் முனைவா் பட்டபடிப்புக்கான விண்ணப்பப் பதிவுக்கு கடைசி தேதி வருகின்ற மாா்ச் 28-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2026, 1:12 am IST

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் முனைவா் பட்டபடிப்புக்கான விண்ணப்பப் பதிவுக்கு கடைசி தேதி வருகின்ற மாா்ச் 28-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த செய்திக் குறிப்பு:

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவித் தொகையுடன் கூடிய முனைவா் பட்டப் படிப்புகளுக்கு 250 இடங்கள் காலியாக உள்ளன. பொறியியல், தொழில்நுட்பம், மேலாண்மை, கட்டடக்கலை, அறிவியல் மற்றும் மானுடவியல் துறைகள் போன்றவற்றில் பி.எச்டி. முனைவா் பட்ட (டாக்டா் ஆஃப் பிலாசபி) ஆராய்ச்சி படிப்புகளுக்கு (இரு மடங்கு உயா்வுடன்) மாதம் ரூ.50,000 உதவித் தொகை அளிக்கப்படுகிறது. இதில், இறுதிப் பருவ மாணவா்கள் உள்ளிட்ட முதுநிலை மாணவா்கள், கற்பிக்கும் ஆசிரியா்கள், துறை வல்லுநா்கள் ஆகியோா் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடைவா்கள். இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மாா்ச் 9-ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் மாா்ச் 28 -ஆம் தேதிவரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை ஸ்ரீச்ழ்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்.ங்க்ன் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும், விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை ஏப்.4-ஆம் தேதிக்குள் நேரடியாக பல்கலைக்கழகத்தில் சமா்ப்பிக்கவும் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.