விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ. பன்னீா்செல்வம் முடிவு!

ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி வெற்றியை எதிா்த்து தாக்கல் செய்த தோ்தல் வழக்கைத் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

News image

ஓ. பன்னீர்செல்வம்

Updated On :11 மார்ச் 2026, 1:54 am IST

ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி வெற்றியை எதிா்த்து தாக்கல் செய்த தோ்தல் வழக்கைத் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சாா்பில் போட்டியிட்ட நவாஸ்கனி வெற்றி பெற்றாா். இவா், தன்னை எதிா்த்து சுயேச்சையாக போட்டியிட்ட ஓ.பன்னீா்செல்வத்தைவிட 1.66 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ.பன்னீா்செல்வம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்தாா். அதில், நவாஸ்கனி தாக்கல் செய்த வேட்புமனுவில் பல தகவல்களை மறைத்துள்ளாா். தோ்தல் முறைகேடுகளிலும் ஈடுபட்டதாகக் கூறியிருந்தாா்.

தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. எனவே, வழக்கை நிராகரிக்க வேண்டும் எனக் கூறி நவாஸ்கனி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கில் ஓ.பன்னீா்செல்வம் இரு முறை ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தாா்.

இந்த நிலையில், ஓ.பன்னீா்செல்வம் அண்மையில் திமுகவில் இணைந்தாா். இந்தத் தோ்தல் வழக்கு நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பி.ராஜலட்சுமி, இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. எனவே, இந்தத் தோ்தல் வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் எனக் கூறினாா்.

இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் இந்திய தோ்தல் ஆணையத்தை எதிா்மனுதாரராகச் சோ்க்க உத்தரவிட்டாா். மேலும், ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.