திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசன கட்டணங்கள் உயர்த்தப்பட்டனவா? என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், விலைவாசி உயர்வு மற்றும் வருவாய் குறைவை ஈடு செய்ய சேவை மற்றும் சிறப்பு தரிசன கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அறிக்கை ஒட்டப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பில், “தங்கரத உலா கட்டணம் ரூ. 2,500-த்திலிருந்து ரூ. 5,000-ஆகவும் (வைப்பு நிதி ரூ. 50,000-லிருந்து ரூ. 1 லட்சமாகவும்), சண்முகார்ச்சனை கட்டணம் ரூ. 5,000-லிருந்து ரூ. 30,000-ஆகவும், 2 நபர்களுக்கான மூலவர் அபிஷேக கட்டணம் ரூ. 1,500-லிருந்து ரூ. 10,000 ஆகவும் உயர்த்தப்படவுள்ளது.
இந்த கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் தங்களின் ஆட்சேபனைகளை வருகிற ஜூலை 7 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் கோயில் நிர்வாகத்திற்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம்” என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திருச்செந்தூர் கோயிலில் கட்டணம் உயர்த்தப்பட்ட சமூக வலைதளங்களில் செய்திகள் வேகமாக பரவிய நிலையில், இதற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், திருச்செந்தூர் கோயிலில் கட்டணம் உயர்த்தப்பட்ட என்பது குறித்து, சென்னை அம்பத்தூரில் அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அமைச்சர் ரமேஷ் பேசுகையில், “திருச்செந்தூர் கோயிலில் கட்டண உயர்வு எதுவுமில்லை. கோயிலில் 20-க்கும் மேற்பட்ட சேவைகள் நடைமுறையில் இருக்கின்றன. அந்த 20 சேவைகளும் அதே கட்டணத்தில்தான் நீடிக்கின்றன.
நிர்வாக ரீதியிலான சில முறைகேடுகள் இருந்தது நம்முடைய கவனத்துக்கு வந்தது. கட்டண உயர்வை அதிகாரிகள் ஏற்கெனவே பரிசீலித்து வைத்திருந்தனர். பொதுமக்களிடையே கருத்து கேட்கப்பட்டிருக்கிறது. பொதுமக்களின் கருத்தைப் பொறுத்தே தமிழ்நாடு அரசு செயல்படும்” என்றார்.
Summary
The Minister for Hindu Religious and Charitable Endowments, Ramesh, has issued a clarification regarding whether darshan fees at the Tiruchendur Murugan Temple have been increased.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூர் கோயிலில் சேவைக் கட்டணம் உயர்வு? பக்தர்கள் அதிர்ச்சி!

திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்படுத்த ஜூலை 1 முதல் தடை!
உங்களுக்கு ஏன் கொந்தளிப்பு வருகிறது: திமுக எம்எல்ஏ-க்கு அமைச்சர் ரமேஷ் கேள்வி

திருச்செந்தூர் கோயில் முறைகேடு: பாரபட்சமின்றி நடவடிக்கை! - அமைச்சர் ரமேஷ்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

