திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கின் உத்தரவை உடனடியாக நிறைவேற்ற முடியாது என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மதுரை எழுமலையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற பலமுறை உத்தரவிட்ட போதிலும், அந்த உத்தரவை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தவில்லை.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற விசாரணைகளில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. குறிப்பாக, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றினால் மட்டுமே வழக்கு முடித்துவைக்கப்படும் என நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் உத்தரவிட்டாா். இந்த உத்தரவுகளை எதிா்த்து மாவட்ட நிா்வாகம் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கடந்த ஜூன் 4 ஆம் தேதி, அவமதிப்பு வழக்கு, மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஆஜரான ராம. ரவிக்குமாா் தரப்பு வழக்கறிஞர், ”புதிதாகப் பொறுப்பேற்ற தமிழக அரசு உயா்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் என்கிற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார்.
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், அவமதிப்பு வழக்குகள் ஒருபுறம் இருந்தாலும், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாமே? எனக் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்க அவகாசம் வழங்கியிருந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு தரப்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பதிலில், “திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கின் உத்தரவை உடனடியாக நிறைவேற்ற முடியாது. தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, கோயில் தரப்பு, தர்கா தரப்பு மற்றும் மக்களை இணைத்து ஏன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணக் கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
Summary
Thiruparankundram case order cannot be implemented immediately - Tamil Nadu government appeals to the Supreme Court
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது!

திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்

பாஜக மாநில துணைத் தலைவர் விலகல்... ‘அண்ணாமலைக்கு அணிலாக இருப்போம்’ என பேட்டி!

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு
விடியோக்கள்

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |
தினமணி செய்திச் சேவை

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly
இணையதளச் செய்திப் பிரிவு

