அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

பிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை!

சட்டப்பேரவையில் தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் பேசியது பற்றி...

News image

பிரேமலதா விஜயகாந்த் - TN Assembly

Updated On :3 மணி நேரங்கள் முன்பு

சட்டப்பேரவையில் தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது, முதல்வர் விஜய்க்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும் பிறந்த நாளில் முதல்வரிடம் ஒரு கோரிக்கை முன்வைப்பதாகக் கூறினார்.

அவர் பேசும்போது "பேரவையில் உறுப்பினர்களுக்கு டம்ளரில் தண்ணீர் கொடுக்கிறார்கள். அது மிகவும் பழைய மாடலாக இருக்கிறது. மேலும் உறுப்பினர்களும் ஒவ்வொரு வரிசையாக வந்து கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு பணிகளும் இருக்கும். தண்ணீர் தீர்ந்துவிட்ட பிறகு மீண்டும் வருகிறார்கள். இது கடினமாக இருக்கிறது. எனவே ஒவ்வொருவருக்கும் ஒரு தனி பாட்டிலில் தண்ணீர் வைக்க வேண்டும். அப்படியே பயன்படுத்திவிட்டு அந்தந்த இடத்தில வைத்துவிடலாம். நெகிழி பயன்படுத்த வேண்டாம். கண்ணாடி பாட்டில்களைப் பயன்படுத்தலாம்" என்றார்.

உடனே திமுக எம்எல்ஏ ஓ. பன்னீர்செல்வம் எழுந்து, "பிரேமலதா ஒரு நல்ல கருத்தை முன்வைத்திருக்கிறார். ஆனால் அது ஏற்புடையதல்ல என்று தெரிவிக்கிறேன். ஏனென்றால் கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை எறிவதற்கு வாய்ப்பிருக்கிறது" என்கிறார். உடனே அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

உடனே பிரேமலதா 'தண்ணீர் பாட்டில் கொண்டுதான் வீச வேண்டும் என்றில்லை. டம்ளரைக் கொண்டும் வீசலாம்" என்றார்.

மேலும் தங்கம் தென்னரசு, 'ஓபிஎஸ் தனது சொந்த அனுபவத்தினால் அவ்வாறு கூறினாரா என்று அறிய விரும்புகிறேன்" என்று கூறினார். உடனே அதற்கும் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

அதற்கு பிரேமலதா, "காலையில் இருந்து காரசார விவாதம் போய்க்கொண்டிருந்தது. அதனால் முதல்வர் பிறந்தநாளில் அவை சந்தோஷமாக இருக்கச் செய்வோம்" என்றார்.

Summary

Premalatha makes a request to the Chief Minister on his birthday; MLAs laugh in the House

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.