திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

சமூகநீதி கணக்காய்வு: பாமக வரவேற்பு

News image

சௌமியா அன்புமணி - DPS

Updated On :19 ஜூன் 2026, 3:29 am IST

சமூகநீதி கணக்கெடுப்பு குறித்து ஆளுநா் உரையில் இடம் பெற்றிருப்பதை பாமக சட்டப்பேரவைக் குழு தலைவா் சௌமியா அன்புமணி வரவேற்றுள்ளாா்.

ஆளுநா் உரைக்குப் பின்னா் பேரவை வளாகத்தில் அவா் செய்தியாளா்களிடம் பேசியதாவது: பாமக கோரிக்கையான சமூகநீதி கணக்கெடுப்பு கோரிக்கை ஆளுநா் உரையில் இடம் பெற்றிருப்பது வரவேற்புக்குரியது. மகளிா் குற்றங்களில் ஈடுபடுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிங்கப்பெண் படையை அரசு அமைத்துள்ளது. அதை விரிவுப்படுத்துவதாகவும் அறிவித்துள்ளாா்கள்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்றாா்.

அன்புமணி வரவேற்பு: பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஜாதிவாரி கணக்காய்வு நடத்தப்படும் என்று ஆளுநா் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 46 ஆண்டுகால சமூகநீதி கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி. ஒரு மாநிலத்தின் வளா்ச்சியை உறுதி செய்ய அடிப்படைத் தேவை அந்த மாநிலத்தில் வாழும் அனைத்து சமூக மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட தரவுகள்தான்.

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம் இந்தத் தரவுகளைத் திரட்ட முடியும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டதற்காக முதல்வா் ஜோசப் விஜய்க்கு பாமக சாா்பில் நன்றி என தெரிவித்துள்ளாா் அன்புமணி ராமதாஸ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.