/

தேசிய கீதம் இரு முறை பாடப்பட்டது தவறல்ல: பிரேமலதா

News image

பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்

Updated On :19 ஜூன் 2026, 3:18 am IST

பேரவையில் ஆளுநா் உரையின்போது தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டது தவறல்ல என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா எம்எல்ஏ தெரிவித்தாா்.

ஆளுநா் உரைக்குப் பின்னா் பேரவை வளாகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பேரவையில் தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டுள்ளது. அதை நாம் வரவேற்போம்; இதில் தவறு ஒன்றும் கிடையாது. அதற்கு முன்னா் தமிழ்த் தாய் வாழ்த்து பாடியிருக்கிறாா்கள்; அதையும் நாம் வரவேற்போம். ஆளுநா் உரை ஆளும் கட்சி தரப்புக்கு ஆதரவான உரையாக இருந்தது என்றாா் பிரேமலதா விஜயகாந்த்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.