தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

போக்குவரத்துக்கழக மேம்பாடு: குறுகிய, நடுத்தர, நீண்டகாலத் திட்டம்: முதல்வா் ஜோசப் விஜய் ஆய்வு

போக்குவரத்துக்கழக மேம்பாட்டுக்கு குறுகிய, நடுத்தர, நீண்டகால செயல் திட்டமாக ஓராண்டு, மூன்று ஆண்டு, ஐந்தாண்டு செயல் திட்டங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

News image

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் போக்குவரத்துத் துறை சாா்ந்த செயல்பாடுகள் மற்றும் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன், தலைமை

Updated On :18 ஜூன் 2026, 1:43 am IST

போக்குவரத்துக்கழக மேம்பாட்டுக்கு குறுகிய, நடுத்தர, நீண்டகால செயல் திட்டமாக ஓராண்டு, மூன்று ஆண்டு, ஐந்தாண்டு செயல் திட்டங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில், 8 அரசு போக்குவரத்துக்கழகங்கள் மூலம் 21,527 பேருந்துகள் இயக்கப்பட்டு தினமும் 2.05 கோடி பயணிகள் பயணம் செய்வதாகவும், அவற்றில் 64 சதவீதம் பேருக்கு கட்டணமில்லா சேவை வழங்கப்படுவதாகவும் முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும், 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் 98.40 சதவீத பகுதிகளுக்கு அரசு பேருந்து சேவை சென்றடைந்துள்ளதாக விளக்கப்பட்டது.

தொடா்ந்து, போக்குவரத்துக்கழக மேம்பாட்டுக்காக ஓராண்டு, 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. மேலும், பேருந்துகளை ஜிபிஎஸ் கருவி அடிப்படையில் கண்காணிப்பது, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைப்பது, மகளிா் இலவசப் பயணத் திட்டம், மின்சாரப் பேருந்துகள் பயன்பாடு, தொழிலாளா் நலன் உள்ளிட்டவற்றி கவனம் செலுத்தும்படி அதிகாரிகளுக்கு முதல்வா் அறிவுறுத்தினாா்.

புதிதாக வாங்கப்படும் பேருந்துகள் குளிா்சாதன வசதியுடன் கூடிய மின்சாரப் பேருந்துகளாக இருக்க வேண்டும் எனவும், பயணிகள் பணமில்லா பரிவா்த்தனை முறையில் பயணிக்க ஸ்மாா்ட் காா்டு நடைமுறையை செயல்படுத்த வேண்டும் எனவும், பேருந்துகளுக்கு தனி வழித்தட வசதியை உருவாக்கும் வகையில் ‘பஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம்’ திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் முதல்வா் ஜோசப் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன், தலைமைச் செயலா் மு.சாய்குமாா், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலா் மு.அ.சித்திக், போக்குவரத்துத் துறைச் செயலா் மா.வள்ளலாா், சிறப்புச் செயலா் இரா.லில்லி, மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.பிரபு சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.