முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

சென்னை - குருவாயூர், திருச்சி - திருவனந்தபுரம் ரயில் சேவைகளில் மாற்றம்!

குருவாயூர் ரயில் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...

News image

ரயில் - கோப்புப் படம்

Updated On :14 ஜூன் 2026, 11:01 am IST

பொறியியல் பணிகள் காரணமாக குருவாயூர் ரயிலின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.

பொறியியல் பணிகளால் குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயிலானது (16128) வரும் 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 29 ஆம் தேதிகளில் சோரனூர் ரயில் நிலையத்தைத் தவிர்த்து திரிசூர், பாலக்காடு, பொள்ளாச்சி, திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.

எதிர்வழித்தடத்தில், சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயிலானது (16127) வரும் 27, 28, 29 ஆம் தேதிகளில் சோரனூர் ரயில் நிலையத்தைத் தவிா்த்து திண்டுக்கல், பொள்ளாச்சி, பாலக்காடு, திரிசூர் வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில்: ஜூன் 15 முதல் 30-ஆம் தேதி வரை தாமதமாக புறப்படும்

திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் ஜூன் 15 முதல் 30-ஆம் தேதி வரை (ஜூன் 20, 24 தவிர்த்து) 75 நிமிஷங்கள் காலதாமதமாக புறப்படும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஞ்சி மணியாச்சி - நாகர்கோயில் டவுன் ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற்று வரும் இரட்டை ரயில் பாதை பணியால் திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (எண்: 22627) ஜூன் 15, 16, 17, 18, 19, 21, 22, 23, 25, 26, 27, 28, 29 மற்றும் ஜூன் 30 ஆகிய தேதிகளில் வழக்கமான நேரத்தைக் காட்டிலும் 75 நிமிஷம் காலதாமதமாகப் புறப்படும்.

திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து வழக்கமாக காலை 7.15 மணிக்கு புறப்படும் திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் மேற்கண்ட தினங்களில் 75 நிமிஷங்கள் கால தாமதமாக காலை 8.30 மணிக்குத்தான் புறப்படும்.

ஜூன் 24-இல் மாற்று வழியில் இயக்கம்:

திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (எண்: 22627) ஜூன் 24-ஆம் தேதி சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகர்கோயில் டவுன், குளித்துறை ஆகிய ரயில் நிலையங்களைத் தவிர்த்து விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, புனலூர் மற்றும் கொல்லாம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி - கான்பூா் இடையே சிறப்பு ரயில்

பொதுமக்களின் வசதிக்காக உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் - திருச்சி - கான்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதன்படி, கான்பூர் சென்ட்ரல் - திருச்சி சிறப்பு விரைவு ரயிலானது (01927) வரும் 17, 24 ஆம் தேதிகளில் இயக்கப்படும். எதிர்வழித்தடத்தில், திருச்சி - கான்பூா் சென்ட்ரல் சிறப்பு விரைவு ரயிலானது (01928) வரும் 19, 26 ஆம் தேதிகளில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The route of the Guruvayur train has been diverted due to engineering works.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.