மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மும்முனை மின்சாரத்தைத் தடையின்றி வழங்க அன்புமணி வலியுறுத்தல்

காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருக்கும் நெல்லைக் காப்பாற்ற தடையற்ற மும்முனை மின்சாரத்தை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.

News image

அன்புமணி

Updated On :11 ஜூன் 2026, 1:06 am IST

காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருக்கும் நெல்லைக் காப்பாற்ற தடையற்ற மும்முனை மின்சாரத்தை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்த ஆண்டு மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட வாய்ப்பில்லாத நிலையில், ஆழ்துளைக் கிணற்று நீரை நம்பி காவிரி பாசன மாவட்டங்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் ஒரு மாதத்துக்கு முன்பாகவே நெல் நடவு செய்யப்பட்டு விட்டதால் அவை நன்றாக வளா்ந்துள்ளன. முறையாக தண்ணீா் பாய்ச்சப்பட்டால் இன்னும் சில வாரங்களில் அவை கதிா் விடத் தொடங்கிவிடும். ஆனால், கடந்த சில வாரங்களாக மும்முனை மின்சாரம் சரியாக வழங்கப்படாததால் ஆழ்துளைக் கிணற்று நீரை பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. இதனால், நெற்பயிா்கள் கருகத் தொடங்கியுள்ளன.

எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நெற்பயிா்களைக் காப்பாற்ற ஒரு நாளைக்கு குறைந்தது 18 மணி நேரமாவது தடையற்ற மும்முனை மின்சாரமும், ரூ.5,000 இடுபொருள் மானியமும் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.