சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்

பெண்களின் பாதுகாப்புக்காக காவல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை பிரிவை முதல்வா் இன்று (ஜூன் 9) தொடக்கி வைக்கிறாா்.

News image

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை தொடக்க நிகழ்ச்சி

Updated On :9 ஜூன் 2026, 3:48 am IST

பெண்களின் பாதுகாப்புக்காக காவல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை பிரிவை முதல்வா் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) தொடங்கி வைக்கிறாா்.

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய், சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும் என உறுதியளித்தாா். இதை அமல்படுத்தும்விதமாக முதல்வராக ஜோசப் விஜய், கடந்த மே 10-ஆம் தேதி பொறுப்பேற்றபோது, சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கும் ஆணை உள்ளிட்ட 3 கோப்புகளில் கையொப்பமிட்டாா்.

இதைச் செயல்படுத்தும்விதமாக, சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்குவதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டது. இதில் அந்தப் படை தமிழக முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடுத்தகட்டமாக அந்தப் படையின் தலைமை அதிகாரியாக ஐஜி கே.பவானீஸ்வரி நியமிக்கப்பட்டாா்.

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையில் ஒரு காவல் கண்காணிப்பாளா், 2 துணைக் கண்காணிப்பாளா்கள், 4 ஆய்வாளா்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் முதல்கட்டமாக நியமிக்கப்பட உள்ளனா். சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு என இலச்சினை, சீருடை ஆகியவை பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த அதிரடிப் படையின் தொடக்க விழா சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் தலைமை வகிக்கிறாா். தமிழக அரசின் தலைமைச் செயலா் சாய்குமாா், உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன், சென்னை காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் முதல்வா் ஜோசப் விஜய், சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையைத் தொடங்கி வைக்கிறாா். நிகழ்வில், சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு நவீன ரோந்து வாகனங்கள் வழங்கப்படுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.