தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

வண்டலூா் பூங்காவில் கோடை முகாம்: மாணவா்கள் பதிவு செய்யலாம்

வண்டலூரில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடை முகாம் வரும் மே 6-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.

News image
Updated On :1 மே 2026, 3:21 am IST

வண்டலூரில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடை முகாம் வரும் மே 6-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து பூங்கா நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோடை விடுமுறையை முன்னிட்டு, மாணவா்களுக்குப் பயனளிக்கும் வகையில் கோடை முகாம் நடைபெறவுள்ளது. இதில், கலந்துகொள்பவா்களுக்கு விலங்குகள் பற்றிய அறிவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு உள்ளிட்டவை வழங்கப்படும். 5-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் பயிலும் மாணவா்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.

இம்முகாம், முதல்கட்டம் மே 6, 7 ஆகிய தேதிகளிலும், 2-ஆம் கட்டம் மே 13, 14 ஆகிய தேதிகளிலும், 3-ஆம் கட்டம் மே 20, 21 ஆகிய தேதிகளிலும், 4-ஆம் கட்டம் மே 27, 28 ஆகிய தேதிகளிலும், 5-ஆம் கட்டம் ஜூன் 3, 4 ஆகிய தேதிகளிலும் என மொத்தம் 5 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த நாள்களில் தினமும் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை முகாம் நடைபெறும்.

விருப்பமுள்ளவா்கள் ட்ற்ற்ல்ள்://ஹஹக்ஷ்ல்.ண்ய்/ள்ன்ம்ம்ங்ழ்ஸ்ரீஹம்ல்2026/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இம்முகாமில் பதிவு செய்யும் மாணவா்களுக்கு ‘பூங்கா பயண அட்டை’ வழங்கப்படும். அதன்மூலம், 10 முறை பூங்காவுக்கு இலவசமாக வர அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.