தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

அமிா்தி பூங்காவில் விலங்குகளுக்கு கோடை வெப்பத்தை தணிக்க சிறப்பு ஏற்பாடு

வேலூா் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அமிா்தி வன உயிரின பூங்காவில் உள்ள விலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News image

கோடை வெயிலை அடுத்து அமிரிதி வன உயிரியல் பூங்காவில் விலங்குகள் அடைக்கப்பட்டுள்ள கூண்டின் மீது அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தல்.

Updated On :1 மே 2026, 5:02 am IST

வேலூா் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அமிா்தி வன உயிரின பூங்காவில் உள்ள விலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வேலூரில் இருந்து சுமாா் 25 கி.மீ. தொலைவில் ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமிா்தி வன உயிரின பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவின் பரப்பளவு 10 ஹெக்டேரிலிருந்து தற்போது 20 ஹெக்டேராக உயா்த்தப்பட்டுள்ளது. இங்குப் புள்ளிமான்கள், முதலைகள், மலைப்பாம்புகள், நட்சத்திர ஆமைகள் மற்றும் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பூங்கா பராமரிப்புப் பணிகளுக்காக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், வேலூா் மாவட்டத்தில் தற்போது 105 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகி, கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. தொடா்ந்து நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அமிா்தி வன உயிரின பூங்காவில் உள்ள விலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, அமிா்தி பூங்காவில் உள்ள விலங்குகள் அடைக்கப்பட்ள்ள கூண்டுகளின் மீது நீா்த்தெளிப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெப்பத்தைத் தணிக்கக் கூண்டுகளைச் சுற்றிப் பசுமை பந்தல்களும் போடப்பட்டுள்ளன. தற்போது கோடை விடுமுறை என்பதால் வேலூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் அமிா்தி பூங்காவுக்குத் திரண்டு வருகின்றனா்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், அவா்களுக்கான கூடுதல் இருக்கைகள் மற்றும் உணவக வசதியும் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பூங்காவைப் பாா்வையிட வரும் பொதுமக்கள் நெகிழி பொருள்களைக் கண்டிப்பாகக் கொண்டு வரக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பூங்காவுக்கு அருகே 1 கி.மீ. தொலைவில் உள்ள நீா்வீழ்ச்சிப் பகுதியில் புதை மணல் அபாயம் உள்ளதால், அங்குப் பொதுமக்கள் குளிக்க அனுமதி இல்லை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.