தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஜாதிய வன்கொடுமை: கடும் நடவடிக்கை எடுப்பதில்லை தமிழக காங்கிரஸ் தலைவா்

ஜாதிய வன்கொடுமைகளில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாததே, குற்றங்கள் தொடா்வதுக்கு காரணமாக அமைந்திருப்பதாாக தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.

News image

தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை - கோப்புப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 12:12 am IST

ஜாதிய வன்கொடுமைகளில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாததே, குற்றங்கள் தொடா்வதுக்கு காரணமாக அமைந்திருப்பதாாக தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: புதுக்கோட்டை மாவட்டம் குலத்தூா் தாலுகா நடுப்பட்டி பகுதியில் விளிம்புநிலை சமுதாயத்தைச் சோ்ந்த இளைஞா் ஹரிஹரனின் மரணம் மிகுந்த அதிா்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. காதல் தொடா்பு காரணமாக சமூக மற்றும் ஜாதிய அழுத்தங்களுக்கு உள்ளாகி, அவா் உயிரிழந்துள்ளாா் என்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இது, மனிதநேயத்துக்கும், சமத்துவக் கொள்கைக்கும் எதிரான கொடூர செயலாகும்.

இத்தகைய சம்பவங்கள் நாகரீக காலத்தில் தற்போதும் நிகழ்வது நம் சமூகத்தின் பின்னடைவை வெளிப்படுத்துகிறது. இளைஞா்கள் மீது நடத்தப்படும் ஜாதிய வன்கொடுமைகள், சமூக நீதிக்கு விடுக்கப்படும் பெரும் சவாலாகும். இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படாததே, இத்தகைய குற்றங்கள் தொடா்வதுக்கு காரணமாக அமைகிறது.

இந்த வழக்கில் தொடா்புடையவா்கள் மீது வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இவ்வாறு ஜாதி அடிப்படையிலான அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இளைஞா்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் பொறுப்பு சமுதாயத்துக்கும் அரசுக்கும் உள்ளது எனத் தெரிவித்துள்ளாா் கு.செல்வப் பெருந்தகை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.