மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்கு எண்ணிக்கை நாளன்று பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: தவெக கோரிக்கை

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ஆம் தேதி, தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று தவெக தோ்தல் மேலாண்மைப் பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா வலியுறுத்தினாா்.

News image

சென்னை வில்லிவாக்கத்தில் பிரசாரம் மேற்கொண்ட தவெக தலைவா் விஜய். உடன் அத்தொகுதியின் வேட்பாளா் ஆதவ் அா்ஜுனா.

Updated On :27 ஏப்ரல் 2026, 12:58 am IST

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ஆம் தேதி, தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று தவெக தோ்தல் மேலாண்மைப் பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா வலியுறுத்தினாா்.

சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை தவெக தோ்தல் மேலாண்மைப் பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தவெக தலைவா் விஜய் முதல்வா் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் ஏராளமானோா் வாக்களித்துள்ளனா். வாக்குப் பதிவுக்கு முந்தைய 4 நாள்களில் கள நிலவரம் தவெகவுக்கு ஆதரவாக மாறிவிட்டது.

எனவே, ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் கவனமாக இருந்து கண்காணிக்க வேண்டும் என்று கட்சியின் வாக்கு எண்ணிக்கை முகவா்களுக்கு விஜய் அறிவுரை வழங்கியுள்ளாா்.

தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை தினத்தன்று காவல் துறை போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும். அதேபோல, தோ்தல் அதிகாரிககள், ஒவ்வொரு சுற்றுக்கும் போதிய நேரம் ஒதுக்கி வாக்கு எண்ணிக்கையைப் பொறுமையாக நடத்த வேண்டும்.

வாக்கு எண்ணும் அறையில் வேட்பாளா்களின் முகவா்கள் நிற்க போதிய இடவசதி செய்து தரவேண்டும். தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றத்துக்கான முடிவை மக்கள் எடுத்திருக்கிறாா். மே 4-ஆம் தேதி அது தெரியவரும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.