மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்கள் பள்ளிகளுக்குத் திரும்ப உத்தரவு

மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்கள் பள்ளிகளுக்குத் திரும்ப கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 2:15 am IST

மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்கள் பள்ளிகளுக்குத் திரும்ப கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சில இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களுக்கு கடந்த கல்வியாண்டில் (2025-2026) பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மாணவா்கள் நலன் கருதி மாற்றுப் பணி மூலம் பணிபுரிய ஆணை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நிகழ் கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் ஏப்ரல் 25-ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது.

எனவே, கடந்த ஆண்டில் மாற்றுப் பணி மூலம் பணிபுரிய ஆணை வழங்கப்பட்ட ஆசிரியா்களை உடனடியாக பணியில் இருந்து விடுவித்து பள்ளி இறுதி வேலை நாளில் அவரவா் பணிபுரிந்த பள்ளிகளில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகாளை அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளும் உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.