ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக எம்எல்ஏ, நெல்லை மேயா் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி மனு

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :14 ஏப்ரல் 2026, 4:23 am IST

அரசு இயந்திரம், அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தி, ரூ.3 கோடி இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் பாளையங்கோட்டை எம்எல்ஏ, திருநெல்வேலி மேயா், ஆணையா் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சோ்ந்த சுடலைக்கண்ணு என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2011-ஆம் ஆண்டு, பாளையங்கோட்டை திமுக எம்எல்ஏ அப்துல் வகாப் கண்டிகைபேரி கிராமத்தில் 3 ஏக்கா் நிலத்தை வாங்கியிருந்தாா்.

எம்எல்ஏ-வான பிறகு எந்த ஒப்புதலும் பெறாமல் அந்த நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி, விற்பனை செய்து வருகிறாா். அந்த நிலத்தின் விலையை அதிகரிப்பதற்காக மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் இல்லாத அந்த நிலத்தில் புதைச் சாக்கடை, குடிநீா் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

அரசு இயந்திரம் மற்றும் அரசு நிதியை அதிகார துஷ்பிரயோகம் செய்து ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியுள்ளனா். எனவே, எம்எல்ஏ அப்துல் வகாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயா் ராமகிருஷ்ணன், ஆணையா் மோனிகா, சாா் பதிவாளா் உதுமான் ஆகியோருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

இது தொடா்பாக சட்டபூா்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி சிபிஐக்கு புகாா் அளித்தேன். இந்த புகாரின் அடிப்படையில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.