விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

News image

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்

Updated On :12 ஏப்ரல் 2026, 11:33 am IST

கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் கோயில் அமைந்துள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும் - தென்னக திருப்பதி, தமிழக திருப்பதி என்றும் போற்றப்படுகிறது.

இத்தகைய பெருமைக்குரிய தலத்தில் ஆண்டுதோறும் பங்குனி பிரமோற்சவம் 12 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 04ஆம் தேதி சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 09ஆம் நாளான இன்று பங்குனி திருவோண நட்சத்திரத்தில் உற்சவர் பெருமாள் ஸ்ரீ பொன்னப்பர் பூமிதேவி தாயார்களுடன் விசேஷ அலங்காரத்தில் திருத்தேருக்கு எழுந்தருள, கோயில் யானை பூமா முன்செல்ல, நாட்டிய குதிரைகள் நடனமாட, கேரள ஜெண்டை வாத்தியங்கள், நாதஸ்வர மேள தாள இசை முழங்க, ஒட்டகங்கள், மயிலாட்டம் ஆகிய கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து கோவிந்தா, கோவிந்தா என விண்ணதிர கோஷமிட்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

Summary

A large number of devotees participated in the Uppiliappan Temple chariot procession near Kumbakonam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.