தமிழக சட்டப்பேரவையில் ஒரே ஒரு பாஜக எம்எல்ஏ கூட இருக்கக் கூடாது என்ற கொள்கை மிகவும் முக்கியம், அந்த கொள்கை பக்கம் தமிழக மக்கள் அனைவரும் நிற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவர் பரகலா பிரபாகர் வலியுறுத்தியிருக்கிறார்.
தமிழகத்துக்கு நான் வந்திருப்பதே, பாஜக இல்லாத தமிழக சட்டப்பேரவை என்ற கொள்கையை வலியுறுத்தத்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பரகலா பிரபாகரன், ஏன் பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடாது என்று சொல்கிறேன் என்றால், மாநிலத்தில் நாம் கொண்டாடி வரும் பல வாய்ப்புகள் முடிந்துபோகும். குறிப்பாக மத நல்லிணக்கம், பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களிடையே இருக்கும் ஒற்றுமை அனைத்துக்கும் முடிவு கட்டுப்படும். சுதந்திரம், சமத்துவம் அனைத்தும் அழிக்கப்படும். பாஜகவுக்கு அளிக்கப்படும் வாக்கு, சமூக நீதிக்கான சாவு மணி. பாஜகவுக்கு வாக்களித்தால் அது பிரிவினையைத் தூண்டும் ஆயுதமாக மாறும்.
பாஜகவுக்கு வாக்களித்தால், நீங்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், என்ன மொழி பேச வேண்டும், எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பதை அவர்கள்தான் தீர்மானிப்பார்கள்.
அனைத்து மக்களும் ஒரு உறுதிமொழியை எடுங்கள், அதுதான், தேர்தல் முடிந்து உருவாகும் தமிழக சட்டப்பேரவை, ஒரு பாஜக எம்எல்ஏ-கூட இல்லாத பூஜ்யம் பாஜக என்ற நிலையை உருவாக்கும்வோம் என்பதை உறுதி செய்யுங்கள்.
பாஜகவுக்கு எதிராக மட்டுமல்ல, பாஜகவின் சித்தாந்தங்களுக்கு எதிரான, அதன் ஆதிக்க விசாரணை அமைப்புகளுக்கு எதிரான போராட்டமாகவும் இது இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எக்காரணம் கொண்டும் தமிழக பேரவைக்குள் பாஜகவை நுழைத்துவிடாதீர்கள் என்று வலியுறுத்தியிருக்கிறார் பரகலா பிரபாகர்.
Summary
Union Minister Nirmala Sitharaman's husband Prabhakaran insisted that a BJP-free Tamil Nadu Assembly should be formed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விருதுநகரில் விஜய பிரபாகர் தோல்வி!

பிரேமலதா, விஜய பிரபாகர் முன்னிலை!

விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் முன்னிலை!

தமிழகம் இழப்புகளைச் சந்திக்கும்: நிர்மலா சீதாராமன்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


