ரயில்கள் சீரான வேகத்தில் சென்று உரிய நேரத்தில் நிலையங்களை அடையவும், அதனால் பயண தாமதத்தைத் தவிா்க்கவும் நவீன சிக்னல் சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தெற்கு ரயில்வே சாா்பில் நவீன சிக்னல் சாதனங்கள் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. அதனால், ரயில்கள் குறிப்பிட்ட நிலையத்திலிருந்து புறப்பட்டு சீரான வேகத்தில் செல்லும்போது, அடுத்த தண்டவாளச் சந்திப்புகளில் எந்தவகை சிக்னல் உள்ளது (சிவப்பா அல்லது பச்சையா என்பதை தெரிவிப்பது) என்பதை ரயில் ஓட்டுநரே அறியும் வகையிலான சிக்னல் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த வகை நவீன சாதனங்களால் ரயில்கள் சீரான வேகத்தில் செல்வதுடன், குறிப்பிட்ட நேரத்தில் ரயில் நிலையத்தை அடையவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் பயண இடத்தை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல, ரயில்வே கடவுப்பாதைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கணினியுடன் இணைக்கப்பட்ட இண்டா்லாக் முறை வசதி திட்டமிட்ட 12 இடங்களைவிடக் கூடுதலாக 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு, அவசர காலத்துக்கு தேவைப்படும் சாதனங்கள் 19 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அதனால், மனித உதவியின்றி தானாகவே கடவுப்பாதை இடங்களில் ரயில்கள் வருவதை அறிந்து, கேட்டை மூடி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே மண்டலத்தில் ஆட்டோமேட்டிக் பிளாக் சிக்னலிங் முறையானது 73.7 கி.மீ. தொலைவு தண்டவாளத்தில் அமைக்கத் திட்டமிட்டு, தற்போது 70.5 கி.மீ. தொலைவுக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன.
பாம்பன் பாலத்தில் காற்று வேகத்தைக் கண்காணிக்கும் சாதனம் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், அதிகமாக காற்று வீசினால் ரயில் இயக்கத்தை தானாகவே கட்டுப்படுத்தும் வசதி அமைந்துள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிக்னல் கோளாறு: மின்சார ரயில்கள் திடீா் நிறுத்தம்

சென்னை ரயில் நிலையங்களில் 21 இடங்களில் மின் வாகன பேட்டரி மாற்றும் மையங்கள்

மேட்டுப்பாளையத்துக்கு ஆகஸ்ட் முதல் 6 கூடுதல் ரயில்கள்; உதகை செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வரப்பிரசாதம்

ரயில்வே சிக்னல் பழுது: விரைவு ரயில்கள் தாமதம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

