மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிக்னல் கோளாறு: மின்சார ரயில்கள் திடீா் நிறுத்தம்

News image
Updated On :8 மே 2026, 6:19 am IST

சிக்னல் கோளாறு காரணமாக வியாழக்கிழமை காலை 3 மின்சார (இமு) ரயில்கள் பேசின் பாலம் அருகே திடீரென நிறுத்தப்பட்டதால், பயணிகள் நடுவழியில் இறங்கி செல்லும் நிலை ஏற்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான விரைவு ரயில்கள் மற்றும் புகா் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் பேசின் பாலம் வழியாக கொருக்குப்பேட்டை சென்று பின்னா், அந்தந்தப் பகுதி தண்டவாளங்களில் செல்கின்றன.

பேசின் பாலம் பகுதியில் அமைக்கப்பட்ட ரயில் தண்டவாள சிக்னல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இதற்கிடையே பேசின் பாலம் அருகேயுள்ள தண்டவாள சிக்னலில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, கொருக்குப்பேட்டையிலிருந்து வந்த 3 இமு வகை புகா் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

பணிகளுக்காக பயணித்த நூற்றுக்கணக்கான பயணிகள் கீழே இறங்கி தண்டவாளப் பகுதிகளில் நடந்து சென்ட்ரல் நிலையம் வந்தனா். இதனால், பயணிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

இதனிடையே, காலை 10.18 மணிக்கு சிக்னல் கோளாரு சரி செய்யப்பட்டு ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.