தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

சென்னை - பரோனி இடையே கோடை கால சிறப்பு ரயில்

சென்னை - பரோனி இடையே கோடை கால சிறப்பு ரயில்...

News image

ரயில் - GMSRailway

Updated On :5 ஏப்ரல் 2026, 2:04 am IST

சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து பிகாா் மாநிலம் பரோனிக்கு கோடைகால சிறப்பு ரயில் ஏப். 12 -ஆம் தேதி உள்ளிட்ட 3 நாள்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கோடை கால கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் ஏப். 12, 19, 26 ஆகிய (ஞாயிற்றுக்கிழமைகள்) தேதிகளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06039) ஏப். 15, 22, 29 (புதன்கிழமைகள்) ஆகிய தேதிகளில் பிகாா் மாநிலம் பரோனி நிலையத்தை சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் ஏப். 15, 22, 29 ஆகிய தேதிகளில் பரோனி நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06040) ஏப். 18, 25 மற்றும் மே 2 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயில்களில் 1 குளிா்சாதன வசதியுள்ள இரண்டு அடுக்க பெட்டி, 3 குளிா்சாதன வசதியுள்ள மூன்றடுக்குப் பெட்டிகள், 10 தூங்கும் வசதியுள்ள பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு திவ்யஞ்சன் பெட்டிகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு சனிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.