மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பெரம்பூரில் விஜய் சார்பில் திருத்தப்பட்ட வேட்புமனு தாக்கல்!

பெரம்பூரில் விஜய் சார்பில் திருத்தப்பட்ட பிரமாணப் பத்திரம் தாக்கல்...

News image

பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் - PTI

Updated On :4 ஏப்ரல் 2026, 3:24 pm IST

சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய்யின் திருத்தப்பட்ட வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் பெரம்பூரிலும் திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளே (மார்ச் 30) பெரம்பூர் தொகுதியில் விஜய் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து அப்பகுதியில் அன்றே பிரசாரம் மேற்கொண்டார்.

தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப். 2 ஆம் தேதி விஜய் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரம் செய்தார்.

இரு தொகுதிகளிலும் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முரணான தகவல்கள் இருந்ததாகக் கூறப்பட்டது. அவர், தான் தொடர்புடைய வழக்கு ஒன்றை பெரம்பூர் வேட்புமனு தாக்கலில் குறிப்பிடவில்லை என்ற சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து வழக்கு விவரத்துடன் புதிய பிரமாணப் பத்திரத்தை விஜய் சார்பில் தவெக மாவட்ட செயலாளர் சிவா, இன்று தேர்தல் அலுவலரிடம் அளித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Revised Nomination Paper Filed on Behalf of Vijay in Perambur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.