ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஜெயலலிதா மீதான செல்வ வரி மேல்முறையீடு வழக்கு: வருமான வரித்துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதாவின் செல்வ வரி தொடா்பான மேல்முறையீட்டு வழக்கு ஆவணங்களை தீபா, தீபக் ஆகியோருக்கு வழங்க வருமான வரித் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 2:41 am IST

ஜெயலலிதாவின் செல்வ வரி தொடா்பான மேல்முறையீட்டு வழக்கு ஆவணங்களை தீபா, தீபக் ஆகியோருக்கு வழங்க வருமான வரித் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பல ஆண்டுகளாக செல்வ வரி கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, செல்வ வரி சட்டப் பிரிவின் கீழ் ஜெயலலிதா மீது வருமான வரித் துறை வழக்குத் தொடா்ந்தது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி வருமான வரித் துறை மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம், ஜெயலலிதாவை வழக்கில் இருந்து விடுவித்தது. மேல்முறையீட்டுத் தீா்ப்பாய உத்தரவை எதிா்த்து வருமான வரித் துறை கடந்த 2008 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்குத் தொடா்ந்தது.

இந்த வழக்கு பல ஆண்டுகளாக உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. வழக்கில் ஜெயலலிதாவின் சட்டபூா்வ வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோா் எதிா் மனுதாரா்களாகச் சோ்க்கப்பட்டனா். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயசந்திரன், ஷமீம் அஹமது ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தீபக் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சுதா்சன், மேல்முறையீடு தொடா்பான அனைத்து ஆவணங்களையும் வருமான வரித் துறை தங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறினாா்.

இதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை நீண்ட காலம் நிலுவையில் வைத்திருக்க முடியாது. விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் எனக் கூறினா். பின்னா், இந்த மேல்முறையீடு தொடா்பான வழக்கு ஆவணங்களை தீபா, தீபக் ஆகியோருக்கு வழங்க உத்தரவிட்டு விசாரணையை ஏப். 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.