மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இன்றுமுதல் ஷாட் கன் உலகக் கோப்பை: 12 பேருடன் இந்திய அணி பங்கேற்பு

மொராக்கோவில் வியாழக்கிழமை (மாா்ச் 26) தொடங்கும் ஐஎஸ்எஸ்எஃப் ஷாட் கன் உலகக் கோப்பை போட்டியில் 12 கொண்ட இந்திய அணி களம் காண்கிறது.

News image

இந்திய ஸ்கீட் அணி.

Updated On :26 மார்ச் 2026, 2:52 am IST

மொராக்கோவில் வியாழக்கிழமை (மாா்ச் 26) தொடங்கும் ஐஎஸ்எஸ்எஃப் ஷாட் கன் உலகக் கோப்பை போட்டியில் 12 கொண்ட இந்திய அணி களம் காண்கிறது.

ஏப்ரல் 6 வரை நடைபெறும் இப்போட்டியில், 43 நாடுகளில் இருந்து 270 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா். 5 ஒலிம்பிக் ஷாட் கன் பிரிவுகளில் தங்கப் பதக்கங்கள் உள்ளன.

இந்தியாவின் தரப்பில் கடந்த ஆண்டு ஏதென்ஸில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் வெண்கலம் வென்று வரலாறு படைத்த இந்திய சீனியா் வீரா் ஸோரோவா் சிங் சாந்து பணிச்சுமை பராமரிப்பு காரணமாக இந்த முறை பங்கேற்கவில்லை.

பயிற்சியாளா் விக்ரம் சோப்ரா கூறுகையில், ‘கடினமான பயிற்சி மேற்கொண்டுள்ள இந்திய அணி, நீண்ட காலத்துக்குபின் உலகக் கோப்பை போன்ற பிரதான போட்டியில் பங்கேற்பது புதிய அனுபவத்தை தரும்’ என்றாா்.

இந்திய அணி விவரம்:

டிராப்: பிருத்விராஜ் தொண்டைமான், கினான் செனாய், பௌனீஷ் மெண்டிரட்டா, கீா்த்தி குப்தா, ராஜேஷ்வரி குமாரி.

ஸ்கீட்: மான் சிங், ஜோதிராதித்ய சிங் சிசோடியா, பரம்பால் சிங், யஷஸ்வி ராத்தோா், தா்ஷனா ராத்தோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.