நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

10 பேர் கொண்ட பராகுவேவிடம் தோல்வியுற்று, கண்ணீருடன் உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிய துருக்கி!

கால்பந்து உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிய துருக்கி அணி குறித்து...

News image

கண்ணீருடன் துருக்கி வீரர், வெற்றியுடன் பராகுவே, சோகத்தில் துருக்கி வீரர்கள். - படங்கள்: ஏபி

Updated On :8 மணி நேரங்கள் முன்பு

பராகுவே அணியிடம் துருக்கி தோல்வியுற்று, கால்பந்து உலகக் கோப்பையிலிருந்து இரண்டாவது அணியாக வெளியேறியது. முதல் அணியாக ஹைதி வெளியேறியது.

இந்த உலகக் கோப்பையில் இருந்து பிரேசில் அணியிடம் ஹைதி அணி 0-3 என தோல்வியுற்று முதல் அணியாக வெளியேறியது. இதனைத் தொடர்ந்து பராகுவே - துருக்கி அணிகள் மோதின.

இந்தப் போட்டியின் 2ஆவது நிமிஷத்திலேயே பராகுவே அணியின் மத்தியாஸ் கலார்சா கோல் அடித்து அசத்தினார். 1-0 என முன்னிலை வகித்தது.

பின்னர், முதல் பாதியின் ஸ்டாப்பேஜ் நேரத்தில் 45+3ஆவது நிமிஷத்தில் பராகுவே அணியின் மிகுவெல் அல்மிரான் வாயிக்கு அருகே கை வைத்து பேசியதால், புதிய விதியின்படி ரெட் கார்டு வழங்கப்பட்டது. இதனால், பராகுவே அணியில் ஒரு வீரர் குறைவாகவே விளையாடினார்கள்.

பின்னர், இரண்டாம் பாதியில் பலமுறை துருக்கி முயற்சித்தும் 10 பேர் கொண்ட பராகுவே அணியிடம் கோல் அடிக்க திணறியது. இறுதியில் 1-0 என பராகுவே அசத்தல் வெற்றி பெற்றது.

துருக்கி அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது. தற்போது, இரண்டாவது போட்டியின் தோல்வியால் இரண்டாவது அணியாக உலகக் கோப்பையில் இருந்து துருக்கி அணி வெளியேறியது.

Summary

Turkiye knocked out of World Cup 2026 after 1-0 defeat to 10-man Paraguay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.