அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

5 கோல்கள் அடித்து ஸ்வீடன் அசத்தல் வெற்றி!

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்வீடன் - துனிசியா இடையேயான போட்டியில் 5-1 என்ற கணக்கில் ஸ்வீடன் வென்றது.

News image

இரு கோல்கள் அடித்த யாசின் அயாரியைக் கொண்டாடிய ஸ்வீடன் வீரர்கள் - AP

Updated On :15 ஜூன் 2026, 8:05 pm IST

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்வீடன் - துனிசியா இடையேயான போட்டியில் 5-1 என்ற கணக்கில் ஸ்வீடன் வென்றது.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘எஃப்’ பிரிவில் உள்ள அணிகளான ஸ்வீடன் - துனிசியா இடையேயான போட்டி இன்று அதிகாலை நடைபெற்றது.

குவாடலூப்பில் நடந்த ஆட்டத்தில் யாசின் அயாரி 7-வது நிமிடத்தில் பெனால்டி பகுதிக்கு வெளியே இருந்து அடித்த மின்னல் வேக ஷாட் மூலம் தனது முதல் கோலை சுவீடன் பதிவு செய்தது.

ஆட்டம் தொடங்கிய அரை மணி நேரத்தில் அலெக்சாண்டர் இசாக் 2-வது கோலை அடித்து ஸ்வீடனை 2- 0 என்ற கணக்கில் முன்னிலைக்குக் கொண்டு வந்தார். லிவர்பூல் வீரரான அவர் சிறப்பாக முன்னேறி அந்த ஷாட்டை அடித்தார்.

துனிசியா அணியின் நம்பிக்கை தகர்ந்து கொண்டிருந்த நேரத்தில், அந்த அணியின் ஓமர் ரெகிக் தலையால் முட்டி ஒரு கோலை அடித்து 2-1 என்று துனிசியாவின் கோல் கணக்கைத் தொடங்கினார்.

ஆனால், அந்தத் தொடக்கத்தை உடனடியாக முடக்கும் விதமாக ஆட்டத்தின் பாதிக்கும் மேல் 59-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீரர் விக்டர் யோகரெஸ் ஒரு கோல் அடித்து 3-1 என்று முன்னிலையை உயர்த்தினார்.

பின்னர், இரு அணிகளுக்கும் கோல் அடிக்கும் வாய்ப்புகள் பலமுறை தவறின. ஆனால், ஸ்வீடன் வீரர் மத்தியாஸ் ஸ்வான்பெர்க் 84-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். பின்னர், முதல் கோலை அடித்த யாசின் அவாரி மீண்டும் ஒரு கோல் அடித்து ஸ்வீடனின் கோல் கணக்கை 5-1 என உயர்த்தினார்.

இதன் மூலம், ஸ்வீடன் அணி 5-1 என்ற கணக்கில் அசத்தலான ஆட்டத்தின் மூலம் துனிசியாவை தோற்கடித்தது.

Summary

Sweden defeated Tunisia 5–1 in the World Cup football match.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.