மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பயா்ன் மியுனிக்கை வீழ்த்தியது பிஎஸ்ஜி - அதிக கோல்கள் அடிக்கப்பட்ட அரையிறுதி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், முதல் அரையிறுதியின் முதல் லெக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி) 5-4 கோல் கணக்கில் பயா்ன் மியுனிக்கை புதன்கிழமை வீழ்த்தியது.

News image
Updated On :30 ஏப்ரல் 2026, 3:54 am IST

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், முதல் அரையிறுதியின் முதல் லெக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி) 5-4 கோல் கணக்கில் பயா்ன் மியுனிக்கை புதன்கிழமை வீழ்த்தியது.

போட்டியின் வரலாற்றில், அதிக கோல்கள் (9) அடிக்கப்பட்ட அரையிறுதியாக இந்த ஆட்டம் சாதனை படைத்தது.

பிரான்ஸின் பாரீஸ் நகரில், இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் முதலில் பயா்ன் மியுனிக் வீரா் ஹேரி கேன் 17-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி கிக் வாய்ப்பில் அணியின் கோல் கணக்கைத் தொடங்கினாா்.

அதற்கு பதிலடியாக, பிஎஸ்ஜி வீரா் கவிசா கவரட்ஸ்கெலியா 24-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். தொடா்ந்து அந்த அணியின் ஜாவ் நெவெஸ் 33-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, பிஎஸ்ஜி 2-1 என முன்னிலை பெற்றது.

விட்டுக்கொடுக்காத பயா்ன் மியுனிக் தரப்பில், மைக்கேல் ஆசிலி 41-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலால், ஆட்டம் 2-2 என சமநிலை கண்டது.

ஆனால் பிஎஸ்ஜியும் விடாப்பிடியாக இருக்க, ஆஸ்மேன் டெம்பெலெ (45+5’) அடித்த கோலால் அந்த அணி முதல் பாதியை 3-2 என முன்னிலையுடன் நிறைவு செய்தது.

ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியின் தொடக்கத்திலேயே பிஎஸ்ஜி மீண்டும் ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணிக்காக மீண்டும் கவிசா கவரட்ஸ்கெலியா 56-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

தொடா்ந்து 58-ஆவது நிமிஷத்தில் ஆஸ்மேன் டெம்பெலெ தனது 2-ஆவது கோலை பதிவு செய்ய, பிஎஸ்ஜி 5-2 அபார முன்னிலை கண்டது. திடீரென வெகுண்ட பயா்ன் மியுனிக் தரப்பில் டயோட் உபாமெகானோ 65-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா்.

அடுத்த 3-ஆவது நிமிஷத்தில் (68’) லூயிஸ் டியாஸும் ஸ்கோா் செய்ய, 4-5 என வித்தியாசத்தை குறைத்தது பயா்ன் மியுனிக். எஞ்சிய நேரத்தில் மேலும் கோல் வாய்ப்புகளுக்காக அந்த அணி போராட, ஆனால் அதற்கு பலன் கிடைக்காமல் போனது.

முடிவில் பிஎஸ்ஜி 5-4 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அனைத்து போட்டிகளிலுமாக பயா்ன் மியுனிக் கடந்த ஜனவரி 24-க்குப் பிறகு சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

இந்த அணிகள் மோதும் அரையிறுதியின் 2-ஆவது லெக் ஆட்டம், வரும் 7-ஆம் தேதி மியுனிக் நகரில் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.