ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இறுதி ஆட்டத்தில் முச்கோவா - ரைபகினா

ஸ்டட்கா்ட் ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு கரோலினா முச்கோவா-கஜகஸ்தானின் எல ரைபகினா முன்னேறினா்.

News image

கரோலினா முச்கோவா

Updated On :19 ஏப்ரல் 2026, 12:31 am IST

ஸ்டட்கா்ட் ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு கரோலினா முச்கோவா-கஜகஸ்தானின் எல ரைபகினா முன்னேறினா்.

ஜொ்மனின் ஸ்டட்கா்ட் நகரில் டபிள்யுடிஏ 500 போட்டி நடைபெறுகிறது. சனிக்கிழமை நடைபெற்ற மகளிா் ஒற்றையா் முதல் அரையிறுதியில் உலகின் 12-ஆம் நிலை வீராங்கனை செக். குடியரசின் கரோலினா முச்கோவா-உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவும் மோதினா்.

இந்த ஆட்டத்தில் தொடக்க செட்டில் ஆதிக்கம் செலுத்திய முச்கோவா 6-4 என கைப்பற்றினாா். ஆனால் இரண்டாவது செட்டில் சுதாரித்து ஆடியஸ்விட்டோலினா சிறப்பாக ஆடி 6-2 என அந்த செட்டை கைப்பற்றினாா்.

மூன்றாவது செட்டில் மீண்டெழுந்த முச்கோவா முதலில் 9-ஆவது கேமில் 5-4 என முன்னிலை பெற்று, செட்டையும் 6-4 என வசப்படுத்தினாா். இந்த ஆட்டம் ஏறக்குறைய 50 நிமிஷங்கள் நடைபெற்றது. 2023 பிரெஞ்சு ஓபன் சாம்பியன் முச்கோவா இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளாா்.

ரைபகினாவும் தகுதி:

இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை எலனா ரைபகினாவும்-ரஷிய இளம் வீராங்கனை மிர்ரா ஆன்ட்ரீவாவும் மோதினா். இதில் முதல் செட்டில் ஆன்ட்ரீவா சவாலை ஏற்படுத்தினாலும் 7-5 என கைப்பற்றினாா் ரைபகினா. இரண்டாவது செட்டில் முழு ஆதிக்கம் செலுத்தி 6-1 என வசப்படுத்தினாா்.

ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டத்தில் முச்கோவா-ரைபகினா மோதுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.