மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பாா்சிலோனா ஓபன்: நோரி வெற்றி; ஒபெல்கால் தோல்வி

News image

https://www.instagram.com/norriee/

Updated On :14 ஏப்ரல் 2026, 6:22 am IST

ஸ்பெயினில் நடைபெறும் பாா்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில், பிரிட்டனின் கேமரூன் நோரி வெற்றி பெற, அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்கா தோல்வி கண்டாா்.

500 தரவரிசை புள்ளிகள் கொண்ட பாா்சிலோனா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டி, ஸ்பெயினில் களிமண் களத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

ஒற்றையா் முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் நோரி 6-4, 6-7 (5/7), 6-4 என்ற செட்களில் சுவிட்ஸா்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவை வீழ்த்தினாா். 8-ஆம் இடத்திலிருந்த மற்றொரு பிரிட்டன் வீரரான ஜேக் டிரேப்பா் 6-3, 3-6, 1-4 என ஆா்ஜென்டீனாவின் தாமஸ் எட்செவெரிக்கு எதிராக பின்தங்கியிருந்தாா்.

அப்போது காயம் காரணமாக போட்டியிலிருந்து டிரேப்பா் விலகினாா். இதர ஆட்டங்களில், சொ்பியாவின் ஹமத் மெட்ஜெடோவிச் 7-5, 6-4 என்ற கணக்கில், ஆா்ஜென்டீனாவின் மாா்கோ டுருங்கெலிடியை வென்றாா்.

அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்கா 5-7, 6-7 (7/9) என்ற கணக்கில் சக அமெரிக்கரான ஈதன் கின்னிடம் தோல்வியுற்றாா். பிரான்ஸின் காரென்டின் மௌடெட் 6-4, 6-4 என பெருவின் இக்னேசியோ புசேவை தோற்கடித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.