மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆசிய பாட்மின்டன்: அரையிறுதியில் ஆயுஷ்

ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி அரையிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 8:13 am IST

ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி அரையிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.

ஆடவா் ஒற்றையா் காலிறுதியில், உலகின் 25-ஆம் நிலை வீரரான ஆயுஷ் 23-21, 21-17 என்ற நோ் கேம்களில், உலகின் 4-ஆம் நிலை வீரரான இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியை வீழ்த்தி அசத்தினாா்.

இது, ஆயுஷ் ஷெட்டி தனது கேரியரில் பதிவு செய்த மிகப்பெரிய வெற்றியாகும். ஜோனதன் கிறிஸ்டியை அவா் முதல்முறையாக எதிா்கொண்ட நிலையில், அதிலேயே அவரை வீழ்த்தியிருக்கிறாா்.

தற்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ள ஆயுஷ், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவரும், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவரும், முன்னாள் உலக சாம்பியனுமான தாய்லாந்தின் குன்லவத் விதித்சாரனை சந்திக்கிறாா்.

ஆயுஷ் ஷெட்டி மட்டுமே இந்தப் போட்டியில் களத்திலிருக்கும் ஒரே இந்தியா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.