பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அறிமுக போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர் அராஃபத் மின்ஹாஸ்!

பாகிஸ்தான் வீரர் அராஃபத் மின்ஹாஸ் தனது அறிமுக போட்டியில் நிகழ்த்திய சாதனை குறித்து...

News image

5 விக்கெட்டுகள் வீழ்த்திய மகிச்சியில் பாகிஸ்தான் வீரர் அராஃபத் மின்ஹாஸ். - படம்: ஏபி

Updated On :31 மே 2026, 2:37 pm IST

ராவல்பிண்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வீரர் அராஃபத் மின்ஹாஸ் தனது அறிமுக ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை நிகழ்த்தியுள்ளார்.

ராவல்பிண்டியில் தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 44.1 ஓவர்களில் 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 42.3 ஓவர்களில் 202/5 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் அறிமுகமான 21 வயது பாகிஸ்தானின் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் அராஃபத் மின்ஹாஸ் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதுவரை பாகிஸ்தான் வீரர்களில் யாருமே தனது அறிமுக போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பாக பந்துவீசி அசத்திய அராஃபத் மின்ஹாஸுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அடுத்த போட்டி லாகூரில் ஜூன் 2ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

அறிமுக ஒருநாள் போட்டியில் அசத்திய பாகிஸ்தான் வீரர்கள்

1. அராஃபத் மின்ஹாஸ் - 32/5 (2026)

2. ஜாகீர் கான் - 19/4 (1984)

3. அப்துல் காதிர் - 21/4 (1983)

4. அப்ரார் அகமது - 33/4 (2024)

5. சர்ஃபராஸ் நவாஸ் - 46/4 (1973)

Summary

Pakistan Player Arafat Minhas Sets Historic Record in Debut Match!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.