மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சன்ரைசரஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சன்ரைசரஸ் அணியின் கேப்டனுக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்து...

News image

சன்ரைசரஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ். - படம்: ஏபி

Updated On :13 மே 2026, 5:34 pm IST

சன்ரைசரஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசாததால் ஐபிஎல் நிர்வாகம் அவருக்கு அபராதம் வித்தித்துள்ளது.

நேற்றிரவு (மே.12) நடந்த ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 168/5 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 14.5 ஓவர்களில் 86 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தப் போட்டியில் குஜராத் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சன்ரைசர்ஸ் அணி 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் பின் தங்கியுள்ளது.

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி மெதுவாகப் பந்துவீசியதால் அணியின் கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் விதி 2.22ன் படி கம்மின்ஸுக்கு இந்த சீசனில் முதல்முறை என்பதால் குறைந்தபட்சமாக ரூ.12 லட்சம் அபராதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சன்ரைசர்ஸ் அணியின் தற்காலிக கேப்டனாக இருந்த இஷான் கிஷனுக்கும் இந்த அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

SRH captain Cummins fined for slow over rate

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.