ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சிஎஸ்கேவுக்கு இப்படியொரு அடியா..! முதல் ஆட்டத்தில் படுதோல்வி!

ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!

News image

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜடேஜா - @IPL

Updated On :30 மார்ச் 2026, 10:43 pm IST

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2026-ஆம் ஆண்டு சீசன் கடந்த சனிக்கிழமை ஆரம்பமானது. சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) தனது முதல் ஆட்டத்தில் இன்று(மார்ச் 30) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை குவாஹாட்டியில் சந்தித்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே ரன் திரட்ட தடுமாறியதைப் பார்த்த சென்னை அணியின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். சிஎஸ்கே வீரர்கள் ஆட்டத்திறனைப் பார்த்ததும், முதல் பாதியிலேயே ஆட்டத்தின் முடிவு ஏறத்தாழ கணிக்கப்பட்டுவிட்டது என்றே சொல்லலாம்.

சிஎஸ்கே நிர்ணயித்த 128 ரன்கள் இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர் யஜஸ்வி செய்ஸ்வால் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் வைபவ் சூர்யவன்ஷி 17 பந்துகளில் 305 ஸ்ட்ரைக்ரேட்டில் 52 ரன்கள் (5 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகள்) குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

2 விக்கெட்களை மட்டுமே இழந்து 12.1 ஓவர்களிலேயே 128 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

இதைத்தொடர்ந்து, சிஎஸ்கே தனது இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வரும் ஏப். 3-ஆம் தேதி சென்னையில் எதிர்கொள்கிறது.

Summary

Rajasthan Royals won by 8 wkts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.